"ஒன்றிணைவோம் வா" கொரோனா பாசிட்டிவ் ஆன அடுத்த எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 78,535 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. 44,094 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 51,699 ஆக உயர்ந்துள்ளது

திமுகவின் சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலமாக மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் செய்து வந்த பல திமுகவினருக்கு கொரோனா அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அடுத்தபடியாக அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ பழனி கொரோனவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.டி. அரசு ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ மஸ்தானிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக வட்டாரங்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், திமுகவின் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியாகியதில் இவர் நான்காவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Gingee MLA Masthan positive corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->