திமுகவிற்கு எதிராக திரும்பிய துரைமுருகன்.! மேடையிலேயே வெளியிட்ட பகீர் தகவல்கள்.!
dmk durai murugan speech dmk party against
திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அன்பகத்தில் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனின் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், ஆ.ராசா, வீரமணி, சுபவீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "திமுகவினர் அவரவர் வீடுகளிலேயே தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை." என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
மேலும், "தற்பொழுது தமிழகத்தில் வட இந்தியர்கள் தான் பல்வேறு ஹோட்டல்களிலும் அதிகமாக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு, இந்தியில் பேசினால் மட்டும் தான் புரிகிறது. எனவே எந்த மொழியும் கற்றுக் கொள்வதில் தவறில்லை.
வெள்ளையர்கள் வரவில்லை என்றால் நமது மக்கள் சோமாலியா போலத்தான் இருந்திருப்போம். அவர்கள்தான் நமக்கு ஜனநாயகத்தை பற்றி சொல்லி கொடுத்தவர்கள்." என ஆங்கிலேயர்களை பாராட்டினார் துரைமுருகன்.
Tamil online news Today News in Tamil
English Summary
dmk durai murugan speech dmk party against