குஷ்புவின் சர்ச்சை பேச்சு: போராட்டத்திற்கு கிளம்பிய தி.மு.க. மகளிரணி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பா.ஜனதா நிர்வாகியுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், தாய்மார்களுக்கு மாதம் ரூ. 1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். 

குஷ்புவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் குஷ்புவை எதிர்த்து பல்வேறு நகரங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் தி.மு.க மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஒட்டுமொத்த சென்னை மாவட்ட மகளிர் அணி அணியினர் ஒன்றாக சேர உள்ளனர். 

மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk condemned Kushboo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->