திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் கடந்த 1 -ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து 2 ஆயிரத்து 984 விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனு அளித்தவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் செய்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அப்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.

இந்த நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தி.மு.க. தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidates interview


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->