எல்லாம் வாடகை.. ஒருவேளை உணவிற்கே கையேந்தும் சூழலில், கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு.!!
Dindigul couple suicide due to poor
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியை சார்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் சலூன் கடையினை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி காளியம்மாள் (வயது 54). இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. மேலும், உறவினர்களும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர். தர்மராஜ் சலூன் கடையின் மூலமாக கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மேலும், வாடகை கடை, வாடகை வீடு என கிடைக்கும் வருமானத்தை வைத்து செலவுபோக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சலூன் கடையை திறக்க இயலவில்லை. மேலும், தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் தர்மராஜுக்கு கண் பார்வை சரிவர தெரியாத காரணத்தால், சலூன் கடையினை திறக்க இயலவில்லை.
இதனால் வருமானம் இல்லாது குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், ஒரு சூழ்நிலைக்கு மேலாக தம்பதியை வறுமை வாட்டி வதைத்துள்ளது. இதனால் மனமுடைந்த தம்பதிகள் தங்களின் இல்லத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். தம்பதிக்கு சூப் அருந்தும் பழக்கம் இருந்ததால், அதே பகுதியை சார்ந்த பெண்மணி வழக்கம் போல நேற்று மாலை வேலையில் சூப் கொண்டு வந்துள்ளார்.
வீட்டில் இருவரும் பிரேதமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி அலறியதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்கையில் விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul couple suicide due to poor