தீபாவளிக்காக திறந்திருக்கும் கடைகளை போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது - டிஜிபி அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


வருகிற 24-ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜவுளிகள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கடைகளில் விற்பனை களைகட்டி உள்ளது. 

சென்னையில் உள்ள தி.நகரில் காலை, மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோன்று, புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

ஜவுளி கடைகள் மட்டுமல்லாமல், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விற்பனைக்காக இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள், இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும், செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dgp order to police dont disturb for store sales


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->