தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேவநேய பாவாணர், வீரமாமுனிவர் விருது..! - Seithipunal
Seithipunal


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில், தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேவநேய பாவாணர், வீரமாமுனிவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு தகுதியானோர், sorkuvai.com என்ற வலைதளத்திலுள்ள அந்தந்த விருதுக்கு உரிய விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்;

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள். இந்த விண்ணப்பத்தை, 'இயக்குனர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி., நகர், சென்னை - -600 028' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விருதுக்கு தேர்வாகும் அறிஞருக்கு, தலா 2 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devaneya Bhavanar, Veeramamunivar award to encourage Tamil scholars


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->