அத்திவரதரை தரிசித்த போதே பிரசவ வலி.! சந்நிதியிலேயே அரங்கேறிய சம்பவம்.!
delivery in athivaradhar dharisanam
40 வருடங்களுக்கு ஒருமுறை காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனை காண நாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஜூலை 1-ம் தேதி இந்த அத்திவரதர் வைபவம் தொடங்கியது. இந்நிலையில் வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக இறுதி நாட்களில் காண கூட்டம் அதிகமாகி வருகிறது
இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இன்று நெமிலிபானவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமாரின் மனைவி விமலா அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என்பதால் மிகுந்த கவனத்துடன் தரிசனத்திற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோவில் நிர்வாகத்தின் மூலம் அவரை 16-ம் கால் மண்டபத்தில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அவருக்கு சுக பிரசவத்தில் சுமார் 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்பொழுது அவர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார். தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக பிரசவம் பார்த்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
delivery in athivaradhar dharisanam