வேலூர் : பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் சுகுமார். இவருக்கு கௌரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கௌரி நான்காவது முறையாக கர்ப்பம் தரித்தார்.

கடந்த 6ம்தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி காலை பிறந்த பெண் குழந்தை திடீரென மூச்சு இல்லாமல் இருந்துள்ளது.

கௌரி மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைன்ஹ்து காவல்துறையினர் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. குழந்தை உயிரிழந்தற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death of a baby girl who was just a few days old


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->