மணமுடித்து உல்லாச பயணத்திற்கு வந்த இடத்தில், மனைவிக்கு நேர்ந்த சோகம்.!
death in krishnakiri new married girl
ஒரு மாதத்திற்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 25) என்ற இளைஞருக்கும், நிவேதா (வயது 20) என்ற இளம் பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் கிருஷ்ணகிரியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்னனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள பாம்பர் அணைக்கு உறவினர்களுடன் சேர்ந்து பெருமாள் சாமியும் அவரது மனைவி நிவேதாவும் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அங்கே அவர்கள் அணையின் அருகில் நின்றவாறு கை கோர்த்தபடி செல்பி எடுக்க முற்சித்து இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிவேதா மற்றும் அவரின் உறவினர்களான சினேகா, கனிகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். பெருமாள் சாமி மட்டும் உயிர்தப்பினார்.
அவர் உயிரிழந்த தன்னுடைய உறவினர்கள் மற்றும் மனைவியின் சடலத்தை பார்த்து கத்தி கதறி அழும் காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
death in krishnakiri new married girl