ஆசீர்வாதம் செய்வதாக பணம் கேட்டு மிரட்டல்.. திருமண மண்டபத்தில் தகராறு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள திருவந்திபுரம் பகுதியில், இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்று உள்ளது. அங்கு திரண்டிருந்த திருநங்கைகள் கூட்டம் கூட்டமாகச் சென்று, மணமேடையில் மணமக்களை ஆசீர்வதிப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திருமணம் முடிவதற்கு முன்னதாகவே ஏன் இப்படி அராஜகம் செய்கிறீர்கள்? என்று உறவினர்கள் தட்டிக் கேட்ட நிலையில், திருப்பாதிரிபுலியூர் காவல்துறையினரிடம் மணமக்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து காவல்துறையினர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து, திருநங்கைகளை வெளியேற்றிய நிலையில், கோபமடைந்த திருநங்கைகள் ஏராளமான திருநங்கைகள் உடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். 

மேலும், காவல் அதிகாரிகள் தங்களை தாக்கியதாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Thirupathiripuliyur Transgender Argue with Married Couples and Relation want money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->