வருகின்ற 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: எதற்காக தெரியுமா?
Cuddalore district on 27th Local holiday
கடலூர் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற சிதம்பர நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் வருகின்ற 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் 27ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அவசர அலுவலகங்களை கவனிக்கும் போது குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Cuddalore district on 27th Local holiday