காதல் திருமணம் செய்த மகளின் 6 மாத கருவை மாத்திரை கொடுத்து கலைத்த தாய்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழ நகர் பகுதியை சார்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 21). இவர் தாதன்குட்டை தெரு பகுதியை சார்ந்த கொளஞ்சி என்பவரின் மகன் மணிகண்டனை (வயது 23) காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகம் ஆவார்கள்.

இந்த காதல் விவகாரம் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு தெரியவரவே, பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலிக்கும் போதே இருவரும் நெருங்கி பழகியதால் சுப்புலட்சுமி கர்ப்பிணியாகவே, 6 மாத கர்ப்பிணியாக இருக்கையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 20 ஆம் தேதி மணிகண்டனை திருமணம் செய்தார்.  

திருமணத்திற்கு பின்னர் மணிகண்டனின் வீட்டில் சுப்புலட்சுமி தங்கியிருந்த நிலையில், மணிகண்டனின் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் சுப்புலட்சுமியின் தாய் கஸ்தூரி மகளை வீட்டிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளார். 


 
இதன்பின்னர், மகளுக்கு சத்து மாத்திரை என மாத்திரை கொடுக்கவே, அதனை சாப்பிட்ட சுப்புலட்சுமி சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட கணவர் மணிகண்டன், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் சுப்புலெட்சுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதன்பின்னரே, தனக்கு தாய் சத்து மாத்திரை என்று கருக்கலைப்பு மாத்திரை கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சுப்புலட்சுமி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, கஸ்தூரியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Chola Nagar Mother Abort his Daughter Using Tablet due to Love Marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->