கோவை : கல்லூரி சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் கல்லூரியில் சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி 10 அடி அளவிற்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. 

அப்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில், இடிபாடுகளில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில், உயிரிழந்த 4 பேரில் 3 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் வட மாநில தொழிலாளி எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covai College compound demolished 4 peoples death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->