காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர்... காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால் +2 மாணவியும் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம், வேலம்புதூர் கிராமத்தில் 18 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகில் வசித்து வரும் கதிர்வேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசியுள்ளார். ஆனால், அவர்கள் மறுப்பு தெரித்தனர். மேலும், அவரை கண்டித்துள்ளனட். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த கதிர்வேலும் நீலகண்டராயபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இரு குடும்பத்தினரும் காவல்துறையிடம் தெரிவிக்காமல் இறுதி சடங்கை செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால், தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple commits suicide Near Ranipet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->