சென்னையில் பெய்துவரும் தொடர்மழை: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளிலும் நகரின் முக்கிய சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. 

இரவு முழுவதும் மழை நீட்டித்த நிலையில் முன் எச்சரிக்கை  நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வேறொரு தேதியில் நடைபெறும் எனவும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

continue rain madras university exams postponed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->