எவ்வளவு முயற்சி செய்தாலும்.. நரேந்திர மோடியை பங்கம் செய்த காங்கிரஸ்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்ட செங்கோல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டு பிறகு ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மந்திரங்கள் ஓத செங்கோல் பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் பரவாயில்லை" என ஜவஹர்லால் நேருவின் காலடியில் மோடி சிறிய அளவில் இடம் பெற்றது போன்ற புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஜவஹர்லால் நேருவிற்கு இணையாக வர முடியாது என்ற அர்த்தத்தில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress criticized Narendra Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->