ரெயில் பெட்டியில் தொங்கியபடி சாகசம்! மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் மார்க்கத்தின் மின்சார ரெயில்களில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்பவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் சாகச பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. 

மேலும் ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவதால் அவர்களை ரெயில்வே போலீசார் எச்சரித்தும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

செங்குன்றம் அடுத்த காவாங்கரை பகுதியில் இலங்கை அகதியாக வசிக்கும் மாணவர் (வயது17) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் கல்லூரிக்கு செல்லாமல் சக நண்பர்களுடன் படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். 

அப்போது அந்த கல்லூரி மாணவர் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி பயணம் செய்த்தை மற்ற பயணிகள் எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் சாகச பயணம் மேற்கொண்டார். 

இந்த மின்சார ரெயில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் நின்று விட்டு புறப்பட்டபோது கல்லூரி மாணவர் சாகச பயணம் செய்ய முயன்றதில் கால் சறுக்கி மாணவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மாணவரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு மாணவரின் தலையில் 20-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student adventure train falling down


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->