பாலியல் சீண்டல் செய்த கயவன் போலீஸ் என மிரட்டல்.. ஆவடி போலீஸ் வெளியிட்ட அதிரடி பதிவு.!
coimbedu bus illegal activity avadi police alert
சமீப காலமாகவே பெண்களிடம் பொது இடம் என்று கூட பாராமல் அத்துமீரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பேருந்து பயணங்கள், ஷேர் ஆட்டோ பயணங்கள் என்று சக பயணியாக செல்லும் போது கூட பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்.
இதை பல பெண்கள் வெளியில் கூறுவதில்லை. மனதிற்குள் வைத்து புழுங்குகிறார்கள். வெகு சிலர் மட்டுமே தைரியமாக சண்டையிடுகின்றனர். அந்த வகையில், இன்று கோயம்பேடு செல்லுகின்ற நகர பேருந்தில் ஒரு நபர் பெண்ணிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது சக பயணிகள் அவரிடம் சண்டை போட்ட போது தான் ஆவடி போலீசில் பணிபுரிவதாக கூறி அனைவரையும் மிரட்டியுள்ளார். இது குறித்து வீடியோக்கள் வைரலான நிலையில் அப்படி ஒரு நபர் ஆவடி போலீசில் பணி புரியவில்லை என்று போலீசார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.
இந்த தகாத செயலில் ஈடுபட்ட நபர் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்ற வருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coimbedu bus illegal activity avadi police alert