குன்றத்தூர் அபிராமியை மிஞ்சிய கொடூர தாய்... பச்சிளம் குழந்தைக்கு நரக வேதனையை காண்பித்து கொடூர கொலை....!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்மேடு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த திவ்யா (வயது 30) மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை (வயது 32) ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் மகனான 6 வயது அபிஷேக்கை சூடு வைத்து, அடித்து கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்த விசாரணை அறிக்கையானது தற்போது வெளியாகியுள்ளது. சிறுவனின் தாயார் திவ்யா கூறியதாவது, எனக்கும் எனது கணவருக்கும் இடையே இருந்த கருத்துவேறுபாடு காரணமாக, நான் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக கோவையிலுள்ள துடியலூர் பகுதிக்கு வந்தேன். அந்த சமயத்தில், எனக்கும் ராஜதுரைக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து நாங்கள் இருவரும் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தோம். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே நாங்கள் இருவரும் இருந்து வந்ததால், அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த விஷயத்திற்கு எனது மகன் இடையூறாக இருந்தான். எங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் எனது மகனை பூரிக்கட்டையால் தாக்கினோம். 

பிறகு கரண்டியை நெருப்பில் பழுக்க வைத்து உடல் முழுவதும் சூடு போட்டும் கொடுமை செய்தோம். குழந்தை அழுவதை வீட்டின் உரிமையாளர் தட்டி கேட்டு, எங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். இந்த சமயத்தில், கடந்த 25 நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள சாய்பாபா காலனி பகுதியில் குடி வந்தோம். இங்கும் எங்களின் உல்லாச வாழ்க்கை தொடர்ந்து வந்தது. 

இந்த விஷயத்திற்கு குழந்தைகள் இடையூறாக இருந்தது. மேலும், எனது மகன் அபிஷேக் எங்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் நாங்கள் இரண்டு பேரும் அவனை தாக்கி உடலில் சூடு வைத்து, துடிக்க வைத்து ரசித்தோம். இதில் அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று நன்றாக தெரிந்து, மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுத்தோம். 

அபிஷேக் எதிர்பாராதவிதமாக மயங்கியதால், அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தோம். அவரை பரிசோதனை செய்த அவசர ஊர்தியினர், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது கள்ளக்காதலன் ராஜதுரை காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலமாவது, திவ்யாவின் கணவர் என்று நான் அக்கம்பக்கத்தில் கூறியிருந்தேன். அபிஷேக்கு 6 வயதாகும் நிலையில், அவன் என்னை அப்பா என அழைக்க மறுத்துவிட்டான். நீ எனது அப்பாவும் இல்லை, நீ இங்கே இருக்காதே வீட்டை விட்டு வெளியே போ.. என்று அடிக்கடி கூறி வந்துள்ளான். எங்களின் உல்லாச வாழ்க்கைக்கு அவன் தொந்தரவு செய்து வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவனை அடித்த போது மயங்கி உயிரிழந்தான் என்று கூறியுள்ளான். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore child murder due to illegal affair final murder report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->