தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், அய்யம்பாளையம், பழநி, விருப்பாட்சி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அப்படி தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் இந்தியாவின் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்  மற்றும் டெல்லிக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. 

அப்போது இந்த தேங்காயை உறித்த பிறகு வீணாக உள்ள மட்டைகளை திண்டுக்கல் பகுதியில் உள்ள சிலர் வாங்கிச்சென்று அந்த மட்டையில் உள்ள நார் மற்றும் துகள்களைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 

அந்த நார்களை ஒரு இயந்திரத்தில் கொட்டி பஞ்சுபோல் காற்றில் பறக்கும் அளவிற்கு மிருதுவான பொருளாக மாற்றுகின்றனர். இதில் எந்தவிதமான ரசாயனக் கலவையும் சேர்க்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coconut export to northstates from tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->