ஆளுநரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 33 அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி பல்வேறு தலைவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, வெற்றியின் பாதையில் பல உயரங்களை எட்டி நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்றும், நல்ல உடல் நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் தெரிவித்த ஓராண்டு நிறைவு வாழ்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin thanked the governor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->