அப்படிப்போடு! அனைவருக்கும் ரூ.1000! முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்று, சற்று முன்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்க பணம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தன.

மேலும் பொதுமக்கள் தரப்பிலும் "அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை" வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிபந்தனை இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளில் பலருக்கு பரிசு தொகைக்கான டோக்கன் மறுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin Announce Pongal gift amount for all


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->