பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


பண மோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில், திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் போலீசாரால் சற்றுமுன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விமல் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலனை விருகம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

நடிகர் கமல் நடித்த 'மன்னர் வகையறா' படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் விமல் நடிகர் விமலுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. சிங்காரவேலன் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் கமல் தரப்பில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிங்காரவேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் சிங்காரவேலன் நீதிமன்றம் மூலமாக ஜாமீன் பெற்றிருந்தார். மேலும், ஒரு மாதத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு சிங்காரவேலன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அந்த உத்தரவை சிங்காரவேலன் பின்பற்றவில்லை. இந்த வழக்கில் தற்போது சிங்காரவேலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், நடிகர் விமல் குடுத்த இரண்டாவது புகார் தொடர்பாகவும் தற்போது சிங்காரவேலன் அவரின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் தற்போது சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinema producer sinkaravelan arrested


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->