சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன்.. தப்பித்த சிறுமி.. கம்பி என்னும் காமுகன்.!!
Child sexual torture culprit arrest by police in Thiruthuraipoondi
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்தித்துறைப்பூண்டி உப்பூர் கிராம பகுதியை சார்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி இந்திரா. இவர்கள் இருவருக்கும் 13 வயது பெண் குழந்தை மற்றும் 7 வயதுடைய ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இதே பகுதியை சார்ந்த லட்சுமணன் என்பவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான். காமுகனின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
விபரீதத்தை புரிந்துகொண்ட சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள திருத்துறைப்பூண்டி அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுமிக்கு காமுகன் லட்சுமணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, லட்சுமணனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Child sexual torture culprit arrest by police in Thiruthuraipoondi