"வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும்"..மாற்றுத்திறனாளிக்கு உதவிய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர்..! - Seithipunal
Seithipunal


விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் சரவணன் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கைத்தாங்கலாக தூக்கி ரெயில் பெட்டியில் ஏற்றி விட்டார். 

சரவணனின் இந்த மனிதநேய பணியை, பயணி ஒருவர் 'வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து போலீஸ்காரர் சரவணனுக்கு பாராட்டுக்கள் வந்து குவிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 'வீடியோ' காட்சியை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு, ' சக உயிருக்கு உதவுவதை காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை. 

ரெயில்வே பாதுகாப்பு காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது. அவருக்கு பாராட்டுகள். வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும். மானிடம் தழைக்கட்டும்' என்று பாராட்டி கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister congracts to police man


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->