5 மாவட்டங்களில் சுட்டெரிக்கப்போகும் வெயில்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்தவரையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பஜார், தேவாலா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கோவை மாவட்டத்தில் சோலையாறு பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைப் போன்று மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Regional Meteorological center announce heat wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->