இசைப்புயலால் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்! சென்னை காவல்துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பனையூரில் இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி கடந்த மாதம் 12ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் சென்னையில் பெய்து  கனமழையின் காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. இதனால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police warn traffic jam cause of ARRahman music show


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->