மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 இலட்சம் கேட்டு மிரட்டிய காவல் அதிகாரி பணியிடைநீக்கம்.!! - Seithipunal
Seithipunal


பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.10 இலட்சம் கேட்டு மிரட்டிய காவல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள மண்ணடி பகுதியை சார்ந்தவர் ஜெயப்ரகாஷ். இவர் தனது மனைவியுடன் இணைந்து முத்தியால்பேட்டை பகுதியில் கொரியர் கம்பெனி நடத்தி வருகிறார். கொரியர் கம்பெனிக்கு அவ்வப்போது முத்தியால்பேட்டை காவல் அதிகாரி பெஞ்சமின் பிராங்க்ளின் வந்து சென்றுள்ளார். 

இதன்போது, ஜெயப்ரகாஷின் மனைவி காவல் அதிகாரி பெஞ்சமினுடன் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னாளில் இது அவர்களுக்குள் கள்ளக்காதல் உறவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனிமையில் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதனை பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட காவல் அதிகாரி பெஞ்சமின் பிராங்க்ளின், ஜெயப்ரகாஷை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.10 இலட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். 

இதனையடுத்து, இது தொடர்பாக காவல் அதிகாரி பெஞ்சமின் பிராங்க்ளின் மீது ஜெயப்ரகாஷ் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவே, புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காவல் அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு உறுதியாயகவே, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police Officers Threatening Man with Proof of Enjoy Video with his Wife Now Police Officer suspended


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->