சென்னைக்கு சென்னை என்று பெயர் வர காரணம்! இது ஒருவரின் பெயர்!!
chennai name for chennapa nayakar
பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று 380-வது பிறந்த நாள்..
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.
சென்னைக்கு தற்போது உள்ள அடையாளங்களை வைத்து இன்றைய நாள் கொண்டாடப்படும் நிலையில், சென்னைக்கு சொந்தக்காரரான சென்னப்ப நாயகர் குறித்து பலருக்கும் தெரியவில்லை.
சென்னப்ப நாயகரின் மகன்களான வந்தவாசியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தாமல் வேங்கடப்பா நாயகர் மற்றும் பூந்தமல்லியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தாமல் அய்யப்ப நாயகர் என்ற இரு சகோதர்களிடம் இருந்து ஆகஸ்ட் 22 நாள் 1639 வருடம் பிரட்டிஷ் காரர்கள் ஒப்பந்தம் மூலம் சென்னையை பெற்ற தினமே சென்னை தினம் என கொண்டாடப்படுகிறது.
தாமல் வெங்கடப்பா நாயக்கர், தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
English Summary
chennai name for chennapa nayakar