இரிடியம் பெயரை கூறி தொழிலதிபர் கடத்தல்.. போலீஸ் வேடத்தில் கொள்ளைக்கும்பல் அட்டூழியம்..!
Chennai Kilpauk Business man Mohan Kidnapped at Sathyamangalam Police Rescue
சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பழைமை வாய்ந்த பொருட்களை வாங்கி வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலுள்ள காளகஸ்தி பகுதியை சார்ந்த ரகுமான், சத்தியமங்கலம் பகுதியில் இருடியம் இருப்பதாக ஆசைகாட்டி மோகனை அணுகியுள்ளார்.
இதனையடுத்து மோகன் தனது கார் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் கூட்டாளி கொல்கத்தா ஜாய் ஆகியோருடன் கடந்த 7ஆம் தேதி சத்தியமங்கலம் சென்றுள்ளார். இருடிய கும்பல் சொன்ன இடத்தில் காத்திருந்தபோது, காவல்துறை சீருடையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்களை காரில் கடத்தி விவசாய தோட்டத்தில் மூவரையும் அடைத்து வைத்துள்ளனர்.
இதன்பின்னர், மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் சார்பாக 5 கோடி ரூபாய் பணம் பேசப்பட்ட நிலையில், தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்று பேரம் பேசி ரூ.35 இலட்சம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடத்தல் கும்பலை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வங்கி கணக்கிற்கு, முதற்கட்டமாக ரூபாய் 21 இலட்சம் பணத்தை உடனடியாக போட்டுவிட்டு, கணவர் குறித்த தகவலுக்காக காத்திருக்கவே, எந்தவிதமான தகவலும் வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த வித்யா சத்தியமங்கலத்திற்கு புறப்பட்டுச் சென்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மோகன் உட்பட மூவரையும் மீட்ட நிலையில், கடத்தல் கும்பலிடமிருந்து ரூபாய் 9 இலட்சம் ரொக்கம், மூன்று கார்கள், தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், இவர்களை கடத்திய 6 பேர் மட்டுமின்றி, அவர்களுக்கு 9 பேர் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இந்த கடத்தல் கும்பலில் 15 பேர் ஈடுபட்ட நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் ரமேஷ், ரகுமான் உட்பட 9 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Kilpauk Business man Mohan Kidnapped at Sathyamangalam Police Rescue