சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர அறிய வாய்ப்பு! 10th பாஸ் போதும்! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

(1) சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

2) கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்.

3) குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

(4) சென்னையில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

(5) குடும்ப அட்டை (Ration Card) உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு, 45 நாட்கள் - தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.

சலுகைகள் : சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவைகள் வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும் (பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டும்)

வெகுமதிகள் : சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதி உள்ளவர்கள். விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து நீட்டிக்கப்பட்ட கால அவகாசமான 10.09.2023 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

முகவரி:

சென்னை ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம்,

J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணாசாலை,

சைதாப்பேட்டை, சென்னை-15.

போன் - 044 2345 2441/ 2442.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Home Guards job Sep 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->