மருத்துவமனைகளில் உள்ள மருந்து பொருட்கள் ஏழை நோயாளிகளுக்கு செல்வதில்லை - உயர்நீதிமன்றம் வேதனை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்தவர் முத்துமாலை ராணி. இவர் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணை செய்தார்.

அந்த விசாரணையின் போது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின், தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணம் என்ன? என்பதுக் குறித்தும் விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். 

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் கோரப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்து, அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிப்பது தீவிரமானது என்றும், இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என்று தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court investigation govt hospitals medicine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->