ஏமாற்றிய நடிகர் & அமைச்சர் உதயநிதி! நோட்டீஸ் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்! மாமன்னனுக்கு ஆப்பு?!  - Seithipunal
Seithipunal


மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், அமைச்சரும் நடிகருமான உதயநிதி பதிலளிக்க கூறி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் இராம. சரவணன் தரப்பில் கடந்த வாரம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அவரின் அந்த மனுவில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், அதுவே தனது கடைசி படம் என்று கூறி உள்ளார் என்றும் தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், மீதமுள்ள 20% பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுத்தாரின் மனு குறித்த உரிய பதிலளிக்க கோரி நடிகர் உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்க்கு உத்தரவிட்டது.,

மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 28 க்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 29 ஆம் தேதி மாமன்னன் படம் திரையரங்கில் வெளியாகுமா? என்பது உதயநிதியின் பதில் மனுவை பொறுத்தே அமையும் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc notice issue to Udhay for mamannan Angal movie issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->