ஒரே நேரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ்..., உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஒரே நேரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக தரப்பிலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பிலும், தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கீழ்பதி கிராமத்தில் அதிமுக (இபிஎஸ்) சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதே சமயத்தில், சிவகங்கை அரண்மனை வாசல் அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன், சட்டத்துக்குட்பட்டு 2 மனுக்கள் மீதும் முடிவெடுக்க சிவகங்கை டிஎஸ்பி-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், மனுக்கள் தொடர்பாக மாலை 6 மணிக்குள் முடிவெடுக்குமாறு சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி-க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Division ADMK OPS vs EPS Protest 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->