எஸ்.ஐ மீது ரவுடி சி.டி மணி துப்பாக்கி சூடு... சென்னை காவல்துறை..!
Chennai Famous Rowdy CT Mani Gun Fire Special Task Force SI 1 June 2021
எஸ்.ஐ மீது ரவுடி சி.டி மணி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ரவுடி சி.டி மணியை பிடிக்க சென்ற எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் காயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கிசூட்டில் காயமடைந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார் என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சி.டி மணியின் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று காவல் துறையினர் ரவுடி சி.டி. மணியை கைது செய்தனர்.
தனிப்படை காவல் துறையினர் சி.டி. மணியை கைது செய்ய சென்ற போது, எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்த காயத்துடன் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Famous Rowdy CT Mani Gun Fire Special Task Force SI 1 June 2021