தாலிக்கு தங்கம் திட்டத்தில் மெகா ஊழல்.! தோண்டி எடுக்கும் சென்னை மாநகராட்சி.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் சுமார் 5 ஆயிரம் கிராம் வழங்கியதில் சுமார் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது. சென்னை மாநகராட்சியின் கணக்கு நிலை ஆய்வு கூட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 2018-2019 ஆம் நிதி ஆண்டில் மூவலூர் நாதாமிருதம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தில் 2.62 கோடி ரூபாய் மற்றும் 4,873 கிராம் தங்கம் வழங்கியதில் விதி இழப்பு ஏற்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கணக்கு நிலை தலைவர் தெரிவித்துள்ளார்.

அதே போன்று 2020-2021 ஆம் நிதி ஆண்டில் கொரோனா தடுப்பு மருந்துகள் இலவசமாக எந்தெந்த தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்தான விவரங்கள் இல்லை என்றும், கொரோனா ஆய்வகத்திற்கு கருவிகள் வாங்கியதில் ரூ 47.17 லட்சம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி கணக்கு நிலை தலைவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corp accused corruption in TNgovt marriage assist scheme


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->