ராஜஸ்தானிற்கு விரையும் சென்னை காவல்துறை... சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் மகேஷ் குமார் அகர்வாலின் பெயரில், போலியான முகநூல் கணக்கு துவங்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதனை முன்னதாகவே அறிந்த காவல் துறையினர், இது குறித்த பக்கத்தினை முடக்கி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், போலியான முகநூல் கணக்கை துவங்கி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் ராஜஸ்தானில் இருந்து இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சென்னையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் வேப்பேரியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கையில் பேசினார். இதன்போது, " போலியான முகநூல் கணக்கு மூலமாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் ராஜஸ்தானை மையமாக வைத்து செயல்பட்டு வந்துள்ளது. 

அவர்களை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் விரைவில் ராஜஸ்தான் செல்லவுள்ளனர். கொரோனா காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டாலும், விரைவில் அவர்களை கைது செய்வோம் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI CITY POLICE COMMISSINOR MAGESH KUMAR AGARWAL PRESS MEET 24 SEP 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->