ஒரு நாளுக்கு 8 பேர்.. ஓய்வு பெற்ற டி.எஸ்.பி, காவல் அதிகாரிகள், மருத்துவர்கள் என சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.!
Chennai Child girl Forced Prostitution Case 1 December 2020 Update
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சபினா என்பவர், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், " மதன்குமார், செல்வி, சந்தியா, மகேஸ்வரி, வனிதா, விஜயகுமார், ஷாகிதா பானு, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து, தனது 13 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதன்குமார், சந்தியா, செல்வி, ஷாகிதா பானு ஆகிய 4 பேரும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தெரியவந்துள்ளது. மகேஸ்வரி, விஜயா, கார்த்திக் இதற்கு புரோக்கராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த சிறுமியை போல பலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக மதன்குமார், சந்தியா, மகேஸ்வரி, ஷாகிதா பானு, வனிதா, விஜயா ஆகிய 6 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர்களை தவிர்த்து முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இவர்களின் வாக்குமூலம் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை பகுதியை சார்ந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன் (வயது 44) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும், தனது காம இசைக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை போல பல சிறுமிகளை பலருக்கும் அனுப்பி வைத்ததும், பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ராஜேந்திரன் காவல் ஆய்வாளர் புகழேந்திக்கும் புரோக்கராக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில், சிறுமியை நாளொன்றுக்கு 5 பேர் முதல் 8 பேர் வரை பாலியல் பலாத்காரம் செய்ததும், மொத்தமாக சில மாதங்களுக்கு உள்ளாகவே சிறுமி 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட நபர்களில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர்கள் முதல் மருத்துவர்கள் என மதிப்பு மிக்க நபர்கள் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Child girl Forced Prostitution Case 1 December 2020 Update