#சென்னை | பெண் போலீசுக்கு கத்திக்குத்து - கஞ்சா போதை ஆசாமிக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சம்பவம் நடந்த 23 ஆம் தேதி இரவு சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வா (வயது 29), செங்கல்பட்டு மின்சார ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொன்றிருந்தார்.

அப்போது, மகளீர் மட்டும் பெட்டியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் அமர்ந்திருந்துள்ளார். அவரிடம் இங்கு அமர கூடாது என்று ஆசிர்வா தெரிவிக்கவே, அதற்க்கு அந்த கஞ்சா போதை ஆசாமி, ஆசிர்வா மீது தாக்குதல் நடத்தி, கத்தியால் குத்தியுள்ளார். 

இதில், போலீஸ் ஆசிர்வாவுக்கு கழுத்து, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் ஓடும் ரெயிலில் இருந்து ஆசிர்வா கீழே குதித்தார். இதனை பார்த்த சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெண் போலீசை கத்தியால் குத்திய அந்த கஞ்சா போதை ஆசாமி, அதே செங்கல்பட்டு ரெயிலில் தப்பித்துள்ளார். அவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Beach station Lady police attacked


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->