பட்டப்பகலில் இளைஞர்கள் செய்த மோசமான காரியம்! சிசிடிவியில் பதிவான பகீர் காட்சி!!
chain snatching in thiruvallur district
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியரிடம் தாலி சங்கிலியை பறிக்கின்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோழவரம் அடுத்த நாரணன் பேடு என்னும் பகுதியில் வசித்து வருபவர். இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியர் அணிந்திருந்த 8 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடிவருவதற்குள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சிசிடிவியில் பதிவாகிய வீடியோக்களை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
chain snatching in thiruvallur district