புழல் சிறையில் செல்போன், கஞ்சா வைத்திருந்த இரண்டு கைதிகள் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


புழல் சிறையில் செல்போன், கஞ்சா வைத்திருந்த இரண்டு கைதிகள் மீது வழக்கு பதிவு.!

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் கைதிகளில் சிலர் சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செல்போன், சிம்கார்டு, கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவதாக சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதனைத் தடுப்பதற்காக சிறையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று புழல் சிறையில் காவலர்கள் வழக்கமான சோதனையில் நடத்தினர். அப்போது விஜயராஜ் என்ற கைதியின் படுக்கையில் செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cellphone and drugs seized in puzhal jail


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->