நீதிபதியின் நாக்கை அறுப்போம்! திண்டுக்கல் காங்கிரஸ் நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்கு! - Seithipunal
Seithipunal


சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று, கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளியாக அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது.

இதன்காரணமாக ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 6 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரசின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

"நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்ததும், எங்கள் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்பும் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம்'' என்று, மணிகண்டன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து மணிகண்டன் மீது ஐபிசி பிரிவு 153பி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against Congress Dindigul district manikandan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->