அதிகாலை நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நொடிபொழுதில் உயிர் தப்பிய 5 பேர்! - Seithipunal
Seithipunal


வாழப்பாடி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். 

சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை காரில் சென்றுள்ளார். 

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. 

இதனை பார்த்த மணிகண்டன் காரை உடனடியாக நிறுத்திவிட்டு காரில் இருந்து 5 பேரும் கீழே இறங்கி விட்டனர். இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் அதிகாலை திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car suddenly caught fire5 people survived 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->