வண்டலூர்.! இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(34) என்பவர், வண்டலூர் வெளிவட்டசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car bike accident in Vandalur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->