திண்டுக்கல் அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பில் மோதி உருண்டு விபத்து.! 5 பேர் காயம்.!
Car accident in Dindigul near
திண்டுக்கல் அருகே கார் டயர் வெடித்ததில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி நெடுஞ்சாலை அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோரம் இருந்த தடுப்பு கல்லில் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car accident in Dindigul near