'கேப்டன் விஜயகாந்த் தெரு' - பெயர் பலகையை திறந்து வைத்த கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


நாடி வந்தோருக்கு பசியை போக்கிய புகழ்பெற்ற மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்திற்கு மேலும் ஒரு புகழை அளித்துள்ளனர் சென்னை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 

சிறந்த நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் ஏழை எளியோருக்கு பசியாற்றியும் பொருளுதவி செய்தும் உதவியவர். அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்த இவர் உடல்நல குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். 

இந்நிலையில் பூவிருந்தவல்லி மேல்மணம்பேடு ஊராட்சி நிர்வாகத்தினர் விஜயகாந்தை கௌரவிக்க முடிவு செய்து அங்குள்ள ஒரு சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதாக கிராம சபா கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி 'கேப்டன் விஜயகாந்த் தெரு' என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை திறந்து வைத்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain Vijayakanth Street 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->