#திருவள்ளூர் || கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் பகுதியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து கனகம்மாசத்திரம் காவல்துறையினர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், கனகம்மாசத்திரத்தை சேர்ந்த அருண்(வயது24), சுனில் குமார்(20) மற்றும் சஞ்சய்(19) ஆகிய மூன்று பேர் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in tiruvallur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->