சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர், நேற்று குகை சிவனார் தெரு, கார்கானா பஞ்சந்தாங்கி ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்த ரவிக்குமார்(19) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து பத்தாயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in salem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->