கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள ஏரிக்கரையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், இரண்டு இளைஞர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் சித்தாமூர் பகுதியை சேர்ந்த பாலாஜி(26) மற்றும் வல்லம் பகுதியை சேர்ந்த மதியழகன்(26) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 510 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in Chengalpattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->